20 Good habits in your everyday life:
தினசரி வாழ்வில் நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை!
1. தினசரி காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிஷங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோயில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் உத்தம பெண்கள் நல்ல புஷ;பங்கள் மேகம்; சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை மனைவி குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி வேப்;பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோய் நொடியும் விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. துளசிச் செடியிலும் வேப்ப நெல்லி மரத்திலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
5. இரவில் கண்கள் ஓய்வு பெறுகின்றன. காலையில் எழுந்தவுடன் கண்கள் படிப்படியாக அதன் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்தால் மெல்ல மெல்லப் பரவும் ஒளிச்சக்திக்கு ஏற்ப கண்கள் அதன் சக்தியை இரவு உறக்கத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் படிப்படியாகப் பெறுகின்றன.
6. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
7. சூரியன் உதிக்கும் முன் வாசல் வீடு பெருக்கி நீர் தெளிக்கவும் வெறும் தண்ணீரைத் தெளிக்காமல் பசும் சாணம் சேர்த்துத் தெளித்தால் வெளியிலிருந்து வீட்டிற்குள் எவ்வித விஷக்கிருமிகளும் புகாது. தண்ணீரும் அன்று புதிதாக எடுத்ததாக இருந்தால் நல்லது.
8. அமாவாசை திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.
9. கோலம் போடும் போது ஒரு கோட்டுக் கோலமோ மூன்று இழைக் கோலமோ போடக் கூடாது. இரட்டை இழைக்கோலம் தான் போட வேண்டும். அசுப காரியங்களுக்கு தான் மூன்று இழைக் கோலம் போடுவார்கள்.
10. கோலம் கவர்ச்சியாகவும் அழகாகவும் அமைவது நல்ல சகுனம்.
11. தெற்கு பார்த்து கோலம் போடக் கூடாது. கோலம் தெற்கில் முடியவும் கூடாது.
12. உணவு உண்டபின் குளிக்கக் கூடாது.
13. நள்ளிரவில் குளிக்கக் கூடாது.
14. அமாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
15. பொதுவாக ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. தீபாவளி அன்று ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று மட்டும் விதி விலக்கு குளிக்கலாம். தீபாவளி அன்று மட்டும் விடியற்காலை 4மணி முதல் 6மணிக்குள் கங்காதேவி அனைத்து நீரிலும் பிரதட்சனம் ஆகிறாள். அதற்காகத்தான் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா! என்று பெரியோர்கள் கேட்பார்கள்;.
16. உறவினர்களை ஊருக்கு அனுப்பி விட்டு உடனே எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
17. நாளெல்லாம் உடுத்தியிருக்கும் ஆடையோடும் பெண்கள் புடவையோடும் குளிக்கக் கூடாது. அசுப காரியத்திற்கு மட்டுமே அப்படி குளிப்பார்கள்.
18. ஆடையில்லாமலும் குளிக்கக் கூடாது. ஏதேனும் துண்டை கட்டிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.
19. சூடான தண்ணீரை ஒரு போதும் தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலையில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைகின்றன. மிக குளிர்ந்த தண்ணீரையும் தலையில் ஊற்றக் கூடாது.
20. அமாவாசை பௌர்ணமி தவிர பிற நாட்களில் கடலில் நீராடக் கூடாது. மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் கடலில் நீராடக் கூடாது…
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment