அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர், குலம், நாடு மற்றும் பூசை நாள் | 63 Nayanmars names tamil

பெயர்: 1 ) அதிபத்தர்

குலம்: பரதவர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி ஆயில்யம்

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

 

பெயர்: 2) அப்பூதியடிகள்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை சதயம்

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

 

பெயர்: 3 ) அமர்நீதி நாயனார்

குலம்: வணிகர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆனி பூரம்

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

 

பெயர்: 4 ) அரிவட்டாயர்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை திருவாதிரை

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

 

பெயர்: 5) ஆனாய நாயனார்

குலம்: இடையர்

நாடு: மழநாடு

பூசை நாள்: கார்த்திகை ஹஸ்தம்

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

 

பெயர்: 6) இசைஞானியார்

குலம்: ஆதி சைவர்

நாடு: நடுநாடு

பூசை நாள்: சித்திரை சித்திரை

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

 

பெயர்: 7) இடங்கழி நாயனார்

குலம்: வேளிர்

நாடு: கோனாடு

பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

 

பெயர்: 8) இயற்பகை நாயனார்

குலம்: வணிகர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மார்கழி உத்திரம்

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

 

பெயர்: 9 ) இளையான்குடிமாறார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி மகம்

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

 

பெயர்: 10) உருத்திர பசுபதி நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: புரட்டாசி அசுவினி

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

 

பெயர்: 11 ) எறிபத்த நாயனார்

குலம்: மரபறியார்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மாசி ஹஸ்தம்

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

 

பெயர்: 12 ) ஏயர்கோன் கலிகாமர்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆனி ரேவதி

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

 

பெயர்: 13 ) ஏனாதி நாதர்

குலம்: சான்றார்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: புரட்டாசி உத்திராடம்

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

 

பெயர்: 14) ஐயடிகள் காடவர்கோன்

குலம்: காடவர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: ஐப்பசி மூலம்

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

 

பெயர்: 15) கணநாதர்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: பங்குனி திருவாதிரை

 

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

 

பெயர்: 16 ) கணம்புல்லர்

குலம்: செங்குந்தர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: கார்த்திகை கார்த்திகை

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

 

பெயர்: 17 ) கண்ணப்பர்

குலம்: வேடர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: தை மிருகசீருஷம்

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

 

பெயர்: 18 ) கலிய நாயனார்

குலம்: செக்கார்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: ஆடி கேட்டை

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

 

 

பெயர்: 19 ) கழறிற்றறிவார்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: மலை நாடு

பூசை நாள்: ஆடி சுவாதி

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

 

பெயர்: 20) கழற்சிங்கர்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: வைகாசி பரணி

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

 

பெயர்: 21) காரி நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழநாடு

பூசை நாள்: மாசி பூராடம்

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

 

பெயர்: 22) காரைக்கால் அம்மையார்

குலம்: வணிகர்

நாடு: சோழநாடு

பூசை நாள்: பங்குனி சுவாதி

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

 

பெயர்: 23) குங்கிலியகலய நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழநாடு

பூசை நாள்: ஆவணி மூலம்

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

 

பெயர்: 24) குலச்சிறையார்

குலம்: மரபறியார்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஆவணி அனுஷம்

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

 

பெயர்: 25) கூற்றுவர்

குலம்: களப்பாளர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஆடி திருவாதிரை

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

 

பெயர்: 26) கலிக்கம்ப நாயனார்

குலம்: வணிகர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: தை ரேவதி

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

 

பெயர்: 27) கோச்செங்கட் சோழன்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மாசி சதயம்

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

 

 

பெயர்: 28) கோட்புலி நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆடி கேட்டை

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

 

பெயர்: 29) சடைய நாயனார்

குலம்: ஆதி சைவர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: மார்கழி திருவாதிரை

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

 

பெயர்: 30) சண்டேசுவர நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை உத்திரம்

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

 

பெயர்: 31) சக்தி நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஐப்பசி பூரம்

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

 

பெயர்: 32) சாக்கியர்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மார்கழி பூராடம்

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

 

பெயர்: 33) சிறப்புலி நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: கார்த்திகை பூராடம்

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

 

பெயர்: 34) சிறுதொண்டர்

குலம்: மாமாத்திரர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: சித்திரை பரணி

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

 

பெயர்: 35) சுந்தரமூர்த்தி நாயனார்

குலம்: ஆதி சைவர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: ஆடிச் சுவாதி

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

 

பெயர்: 36) செருத்துணை நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி பூசம்

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

 

பெயர்: 37) சோமசிமாறர்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி ஆயிலியம்

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

 

பெயர்: 38) தண்டியடிகள்

குலம்: செங்குந்தர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: பங்குனி சதயம்

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

 

பெயர்: 39) திருக்குறிப்புத் தொண்டர்

குலம்: ஏகாலியர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: சித்திரை சுவாதி

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

 

பெயர்: 40) திருஞானசம்பந்தமூர்த்தி

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

 

பெயர்: 41) திருநாவுக்கரசர்

குலம்: வேளாளர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: சித்திரை சதயம்

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

 

பெயர்: 42) திருநாளை போவார்

குலம்: புலையர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: புரட்டாசி ரோகிணி

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

 

 

பெயர்: 43) திருநீலகண்டர்

குலம்: குயவர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை விசாகம்

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

 

பெயர்: 44) திருநீலகண்ட யாழ்ப்பாணர்

குலம்: பாணர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

 

பெயர்: 45) திருநீலநக்க நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

 

பெயர்: 46) திருமூலர்

குலம்: இடையர்

நாடு: வடநாடு

பூசை நாள்: ஐப்பசி அசுவினி

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

 

பெயர்: 47) நமிநந்தியடிகள்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி பூசம்

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

 

பெயர்: 48) நரசிங்க முனையர்

குலம்: முனையர்

நாடு: நடுநாடு

பூசை நாள்: புரட்டாசி சதயம்

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

 

பெயர்: 49) நின்றசீர் நெடுமாறன்

குலம்: அரசர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஐப்பசி பரணி

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

 

பெயர்: 50) நேச நாயனார்

குலம்: சாலியர்

நாடு: குடகு

பூசை நாள்: பங்குனி ரோகிணி

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.

எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

 

பெயர்: 51) புகழ்சோழன்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆடி கார்த்திகை

எறிபத்தர் தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

 

பெயர்: 52 ) புகழ்த்துணை நாயனார்

குலம்: ஆதி சைவர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி ஆயிலியம்

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

 

பெயர்: 53 ) பூசலார்

குலம்: அந்தணர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: ஐப்பசி அனுஷம்

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்

பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

 

பெயர்: 54) பெருமிழலைக் குறும்பர்

குலம்: குறும்பர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆடி சித்திரை

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.

சுந்தரருடன் கயிலை சென்றவர்.

 

பெயர்: 55) மங்கையர்க்கரசியார்

குலம்: மரபறியார் அரசர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: சித்திரை ரோகிணி

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

 

பெயர்: 56) மானக்கஞ்சாற நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மார்கழி சுவாதி

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

 

பெயர்: 57) முருக நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

 

பெயர்: 58) முனையடுவார் நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: பங்குனி பூசம்

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

 

பெயர்: 59) மூர்க்க நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: கார்த்திகை மூலம்

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

 

பெயர்: 60) மூர்த்தி நாயனார்

குலம்: வணிகர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஆடி கார்த்திகை

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

 

பெயர்: 61) மெய்ப்பொருள் நாயனார்

நாடு: நடுநாடு

பூசை நாள்: கார்த்திகை உத்திரம்

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.

இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

 

பெயர்: 62) வாயிலார் நாயனார் வேளாளர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: மார்கழி ரேவதி

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

 

பெயர்: 63) விறன்மிண்ட நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: மலை நாடு

பூசை நாள்: சித்திரை திருவாதிரை

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

🙏🏻பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

🙏🏻பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

🙏🏻சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

🙏🏻திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

🙏🏻முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

🙏🏻முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
🙏🏻அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்

நலமோடு வாழ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 80 ஆன்மீக குறிப்புகள்

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ்

Leave a Comment