*புரட்டாசி சிறப்பு பகிர்வு*
*கோவிந்தா! கோவிந்தா!!*
*திருமலை-திருப்பதியில், நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் *திருவேங்கடமுடையானுக்கு* *பல திருநாமங்கள். அதில் சிறப்பு மிக்க திருநாமமாக போற்றப்படுவது *கோவிந்தா* *என்னும் நாமமே*!
*பாகவதத்தில், பகவான் கிருஷ்ணனுக்கு பட்டாபிஷேகம்போது சூட்டப்பட்ட திருநாமம் கோவிந்தா*!
*ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில் முன்னிலைப்படுத்துவதும் கோவிந்த நாமத்தையே*!
*ஆண்டாள், குறையொன்றும் இல்லாத கோவிந்தா!* *என்று திருப்பாவையில் போற்றுகிறாள்*
*இத்தகைய சிறப்புமிக்க கோவிந்த நாமத்திற்கு புராண சம்பவமும் ஒன்று!*…
*மஹாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க, மனித வடிவில் திருப்பதி பகுதியில் தோன்றினார்*. *அங்கே அருகிலுள்ள அகஸ்திய முனிவர் ஆஸ்ரமத்தில்- கோசாலைக்குள் சென்று*
*முனிவரே! நான் கலியுகத்தில் சில செயல்களை முடிக்கத் திருவுளம் கொண்டு இங்கு யாம் வந்துள்ளோம்*. *உம்முடைய கோசாலையிலிருந்து ஒரு பசு தானமாக வேண்டினார்*.
*ஐயனே! பசுவினை பிரம்மச்சாரிக்கு தானம் செய்ய இயலாது என்பதை தாங்கள் அறியாததல்ல*
*கலியுகத்தில் தாங்கள் அவதரித்ததுபோல், மஹாலக்ஷ்மியும் அவதரித்திருக்கிறாள்*.
*நீர் அன்னையின்* *கரம்பற்றி தம்பதி* *சமேதராய் வந்து பசுவினை பெற்றுக் கொள்ளலாமே என்று வேண்டினார்*!
*அதன்படியே வேங்கடவன், பத்மாவதியை திருமணம் செய்துகொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்கு செல்லும் முன் அகஸ்தியரிடம் இருந்து பசுவினை பெற்றுச் செல்ல ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அங்கே முனிவரது சீடர்கள் மட்டுமே இருந்தனர்*
*அவர்களிடம் பெருமான், அகஸ்தியரிடம் இருந்து பசுவினை பெற்று செல்ல வந்துள்ளோம் எனக்கூற, முனிவர் வந்தவுடன் பெற்றுச் செல்லலாம், அதுவரை நாங்கள் தங்களுக்கு பணிவிடை செய்து பாக்யமாவோம் என்றனர் சீடர்கள்*.
*தாமதமாகையால், சீடர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்*. *சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றை கேட்டு, உலகையே காக்கும் பரந்தாமனை ஒரு பசுவிற்காக அலைக்கலித்ததை நினைத்து வருத்தமுற்றார்*
*காமதேனு போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக் கொண்டு அவர்கள் சென்ற வழியைத் தேடி நடந்தார். ஒரு வழியாக அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடித்து, எம்பெருமானை நோக்கி குரல் கொடுத்தபடியே சென்றார். *ஸ்வாமி, கோவு-இந்தா* *என்று சப்தமிட்டார்*!
*தெலுங்கில் *கோவு* – *பசு*
*இந்தா* – *எடுத்துக்கொள்* *என்று பொருள்*
*ஆனால் ஸ்வாமிக்கு இவர் குரல்* *கேட்கவில்லை போலும். மீண்டும் மீண்டும் இதையே சொல்லி பின் தொடர்ந்தார்*.
*அகஸ்தியரோ, தன் குரலை உயர்த்தி கோவு இந்தா* *கோவு இந்தா* *என்று வேகமாக உச்சரிக்க, அது கோவிந்தா! கோவிந்தா!* *என்று ஆனது*
*கோவிந்தா! கோவிந்தா! என்று அவர் 108 முறை அழைத்ததும் பெருமாள் நின்றார்! ஓடோடி வந்த அகஸ்தியரிடம் பசுவினை பெற்றுக்கொண்டு, நீர் சொன்ன இந்த கோவிந்த நாமமே எமக்கு உகப்பாயிருக்கிறது!*
*இனி யாரெல்லாம் என்னை கோவிந்தா என்ற நாமத்தை சொல்லி* *அழைக்கிறார்களோ, நான் அவர்களை நோக்கி அனுக்ரஹம் செய்வேன்* *என்று திருமலையில் குடிபுகுந்தான் வேங்கடவன்!*
*கோவிந்தா*! 🙏
*கோவிந்தா*!!🌹
Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More
சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More
தை அமாவாசை முன்னிட்டு செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special... அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More
தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை - 27*… Read More
Thaipusam 2025 - தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும்… Read More