மாடன் வரானே பாடல் வரிகள்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

அந்திப் பூச்சந்தையிலே மாடனும்
ஆடிக் கொண்டாடி வரான்

சுந்தரத் தோழனுக்கு மாடனும்
சொல்லிக் கொண்டாடி வரான்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

அந்தகாரப் பேய்களெல்லாம்
அங்கிருந்து ஆடிக் கொண்டாடி வர

தெந்தினத் தினாவென்று மாடனும்
ஆடிக் கொண்டாடி வரான்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

மஞ்சளைப் பூசிக் கொண்டு மாடனும்
மஞ்சள் நீராடையிலே

வங்காள இசக்கியுடன் மாடனும்
மாடோடும் கையிலேந்தி

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

கையில் குண்டாந்தடியும் மாடனுக்குக்
காலினில் சல்லடமாம்

கண்கள் தீப்பொறிப் போல மாடனுக்குக்
கழுத்துக்குத் தாவடமாம்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

வெண்பட்டுத் தானுடுத்தி மாடனும்
வேட்டைக்குப் போகையிலே

வெறிக்கல் இசக்கி வந்து மாடனைக்
கும்பிட வந்தாளாம்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

திருநீறுப் பூசிக் கொண்டு மாடனும்
தீச்சட்டிக் கையிலேந்தி

தெற்கு திசை நோக்கி மாடனும்
சீறி அலறி வரான்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

கருத்த சித்தாடை இசக்கி
கையில் வளை அடுக்கி

காட்டெருமை மீதில்
மாடனைக் காணவே வந்தாளாம்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

வீரபத்ரனுடன் மாடனும்
வேகமாய் முன் நடக்க

மணிகண்டர் சன்னதியில்
மாடனும் விந்தையாய் ஆடி வரான்

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

எங்க கருப்பசாமி பாடல் வரிகள்

ஆஞ்சநேயர் பாடல்கள்

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)