Pooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற மகா விஷ்ணு பூஜை

வசதிகள் ஆயிரம் இருந்தாலும் , மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை ஆகும் . அனால் ஆனால் பிரச்னை இல்லாத மனிதர் எத்தனை பேர் ? எந்த ஒரு பிரச்சனையால் மனம் துன்பமுற்றாலும் , அதை மாற்றி அமைக்கும் மன அமைதி நலகும் இறைவன் , மஹா விஷ்ணு .
மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக நிறைந்திருப்பவர் . அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

ஒரு பௌர்ணமி அன்று , மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று , செல்வம் சேரும், புகழ் கிட்டும் , பொருளாதார சிக்கல் தீரும்.

மஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் :

நிறை நாழி நெல் , துளசி தளம் , வாசனை திரவியங்கள் , இனிப்பு பலகாரங்கள் , நெற்பொரி , செங்கதலிப்பழம் , பால் , தேன் , இளநீர் , துருவிய தேங்காய் , வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த
அவல் , கற்பூரம் , ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .

பௌர்ணமியன்று , வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து , கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும் .

துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும் . பின் அதற்கு மஞ்சள் , குங்குமம் திலகமிடவும் . அதனருகே , நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி , அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் செய்த விநாயகரை வைத்து , மஞ்சள் குங்கும திலகமிடவும் .

வீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ அவரை பூஜை செய்ய சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து
கற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர
தூபம் காட்டி , ஸ்ரீ மஹாவிஷ்ணு தோத்திரம் , மஹாவிஷ்ணு நாமாவளி கூறி , துளசி தாழ் அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் வணங்க வேண்டும். .

இறைவனுக்கு படைத்த பிரசாதங்களை , பிறருக்கு கொடுத்து விட்டு பின்னரே வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் மன மகிழ்ச்சியும் , குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லா நன்மைகளும் கிட்டும்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 20/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக் கிழமை சித்திரை – 07

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 07* *ஏப்ரல் -… Read More

    3 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    1 day ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 day ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago