ரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Rishabam sani peyarchi palangal 2017-20

சிறு கண்ணோட்டம்:

 

ரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று கஷ்டங்களை தரவல்லது என்றே கூற வேண்டும். உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் இருந்து அஷ்டம சனி துவங்குகிறது. இதனால் செய்யும் தொழிலில் தடை, விரயச் செலவு, தாய் தந்தையருக்கு உடல் நல பாதிப்பு இப்படி பல இன்னல்களை சனிபகவான் உங்களுக்கு தரலாம். தற்சமயம் உங்கள் ராசிக்கு குருபலம் இருப்பதால், சனிபகவானின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனாலும் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பதே சிறந்தது. ஐயோ அஷ்டம சனி காலம் வந்துவிட்டதே என அதற்காக நீங்கள் சோர்ந்து போக தேவை இல்லை. கடவுளின் அனுகிரகம் அனைவருக்கும் உண்டு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேரயை வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். அதோடு சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள். பாரத்தை இறைவனிடம் விட்டுவிடுங்கள் அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.

கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், மோகினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்

இ, ஈ, உ, எ, ஞ, வ, வா, வி,வீ, வு, வே, வை ஆகிய எழுத்துக்களை முதலில் பெயர் எழுத்துக்களாக உள்ளவர்களும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட படும் பலன் கள் ஓரளவு பொருந்தும்.

வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் 2வது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்ரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி நேயர்களே யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.

மற்ற கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்ரபகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக உள்ளார். அப்படிப்பட்ட சுக்ரபகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு / உங்களது ராசிக்கு இதுவரிய இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.

இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக நம்மை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.

உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசுராசி சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை என்று ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.

தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதே சமயம் உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியாக புதன் வருவதால் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு பொருள்வரவு மற்றும் மனைவி மூலம் தனவரவு ஒரு சிலருக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.

பயணங்கள் அடிக்கடி அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.

தாயாரால் எதிர்பாராத நனமைகள் கிட்டும். தாயாரின் அன்பும் ஆதரவும் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும் அதனால் நனமையும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும் சுற்றுலா விருந்து விழாக்களில் கலந்து கொண்டாலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.

வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டு பன்னிக் கொண்டிருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காரர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நனமையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.

சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.

வேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் மற்றும் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.

பரிகாரம்:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.

கல்விக்கு பணம் இன்றி தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். உங்கள் வீட்டருகில் இருக்கும் பெருமாள் கோயிலிற்கு சென்று அங்குள்ள ஆண்டாளை வழிபட்டால் நல்ல பலன் உண்டு. திருவொற்றியூரில் அருள்பலிக்கும் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மனையும் வழிபட்டால் உயர்வு உண்டு.

 

Leave a Comment