சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா)
துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா)
எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
கத்தி கதறுகிறோம் கேட்கலையோ – தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ (சமயபுரத்தாளே மாரியம்மா)
உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே – எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
காலிற் சலங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
பூவாடை வீசுதம்மா பூமகளே
உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
நிறைஞ்ச மனசு உனக்கு தாண்டி பாடல் வரிகள்
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Leave a Comment