அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர், குலம், நாடு மற்றும் பூசை நாள் | 63 Nayanmars names tamil
பெயர்: 1 ) அதிபத்தர்
குலம்: பரதவர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆவணி ஆயில்யம்
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
பெயர்: 2) அப்பூதியடிகள்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: தை சதயம்
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.
பெயர்: 3 ) அமர்நீதி நாயனார்
குலம்: வணிகர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆனி பூரம்
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.
பெயர்: 4 ) அரிவட்டாயர்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: தை திருவாதிரை
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
பெயர்: 5) ஆனாய நாயனார்
குலம்: இடையர்
நாடு: மழநாடு
பூசை நாள்: கார்த்திகை ஹஸ்தம்
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.
பெயர்: 6) இசைஞானியார்
குலம்: ஆதி சைவர்
நாடு: நடுநாடு
பூசை நாள்: சித்திரை சித்திரை
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
பெயர்: 7) இடங்கழி நாயனார்
குலம்: வேளிர்
நாடு: கோனாடு
பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
பெயர்: 8) இயற்பகை நாயனார்
குலம்: வணிகர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: மார்கழி உத்திரம்
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
பெயர்: 9 ) இளையான்குடிமாறார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆவணி மகம்
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
பெயர்: 10) உருத்திர பசுபதி நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: புரட்டாசி அசுவினி
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
பெயர்: 11 ) எறிபத்த நாயனார்
குலம்: மரபறியார்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: மாசி ஹஸ்தம்
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
பெயர்: 12 ) ஏயர்கோன் கலிகாமர்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆனி ரேவதி
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
பெயர்: 13 ) ஏனாதி நாதர்
குலம்: சான்றார்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: புரட்டாசி உத்திராடம்
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
பெயர்: 14) ஐயடிகள் காடவர்கோன்
குலம்: காடவர்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: ஐப்பசி மூலம்
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
பெயர்: 15) கணநாதர்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: பங்குனி திருவாதிரை
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.
பெயர்: 16 ) கணம்புல்லர்
குலம்: செங்குந்தர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: கார்த்திகை கார்த்திகை
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்
பெயர்: 17 ) கண்ணப்பர்
குலம்: வேடர்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: தை மிருகசீருஷம்
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
பெயர்: 18 ) கலிய நாயனார்
குலம்: செக்கார்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: ஆடி கேட்டை
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
பெயர்: 19 ) கழறிற்றறிவார்
குலம்: மரபறியார் அரசன்
நாடு: மலை நாடு
பூசை நாள்: ஆடி சுவாதி
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.
பெயர்: 20) கழற்சிங்கர்
குலம்: மரபறியார் அரசன்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: வைகாசி பரணி
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
பெயர்: 21) காரி நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழநாடு
பூசை நாள்: மாசி பூராடம்
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
பெயர்: 22) காரைக்கால் அம்மையார்
குலம்: வணிகர்
நாடு: சோழநாடு
பூசை நாள்: பங்குனி சுவாதி
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
பெயர்: 23) குங்கிலியகலய நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழநாடு
பூசை நாள்: ஆவணி மூலம்
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
பெயர்: 24) குலச்சிறையார்
குலம்: மரபறியார்
நாடு: பாண்டிய நாடு
பூசை நாள்: ஆவணி அனுஷம்
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
பெயர்: 25) கூற்றுவர்
குலம்: களப்பாளர்
நாடு: பாண்டிய நாடு
பூசை நாள்: ஆடி திருவாதிரை
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
பெயர்: 26) கலிக்கம்ப நாயனார்
குலம்: வணிகர்
நாடு: நடு நாடு
பூசை நாள்: தை ரேவதி
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.
பெயர்: 27) கோச்செங்கட் சோழன்
குலம்: மரபறியார் அரசன்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: மாசி சதயம்
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.
பெயர்: 28) கோட்புலி நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆடி கேட்டை
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.
பெயர்: 29) சடைய நாயனார்
குலம்: ஆதி சைவர்
நாடு: நடு நாடு
பூசை நாள்: மார்கழி திருவாதிரை
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
பெயர்: 30) சண்டேசுவர நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: தை உத்திரம்
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
பெயர்: 31) சக்தி நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஐப்பசி பூரம்
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
பெயர்: 32) சாக்கியர்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: மார்கழி பூராடம்
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
பெயர்: 33) சிறப்புலி நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: கார்த்திகை பூராடம்
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
பெயர்: 34) சிறுதொண்டர்
குலம்: மாமாத்திரர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: சித்திரை பரணி
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
பெயர்: 35) சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்: ஆதி சைவர்
நாடு: நடு நாடு
பூசை நாள்: ஆடிச் சுவாதி
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.
பெயர்: 36) செருத்துணை நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆவணி பூசம்
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
பெயர்: 37) சோமசிமாறர்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: வைகாசி ஆயிலியம்
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.
பெயர்: 38) தண்டியடிகள்
குலம்: செங்குந்தர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: பங்குனி சதயம்
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.
பெயர்: 39) திருக்குறிப்புத் தொண்டர்
குலம்: ஏகாலியர்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: சித்திரை சுவாதி
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
பெயர்: 40) திருஞானசம்பந்தமூர்த்தி
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: வைகாசி மூலம்
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
பெயர்: 41) திருநாவுக்கரசர்
குலம்: வேளாளர்
நாடு: நடு நாடு
பூசை நாள்: சித்திரை சதயம்
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
பெயர்: 42) திருநாளை போவார்
குலம்: புலையர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: புரட்டாசி ரோகிணி
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.
பெயர்: 43) திருநீலகண்டர்
குலம்: குயவர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: தை விசாகம்
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
பெயர்: 44) திருநீலகண்ட யாழ்ப்பாணர்
குலம்: பாணர்
நாடு: நடு நாடு
பூசை நாள்: வைகாசி மூலம்
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்
பெயர்: 45) திருநீலநக்க நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: வைகாசி மூலம்
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்
பெயர்: 46) திருமூலர்
குலம்: இடையர்
நாடு: வடநாடு
பூசை நாள்: ஐப்பசி அசுவினி
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.
பெயர்: 47) நமிநந்தியடிகள்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: வைகாசி பூசம்
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.
பெயர்: 48) நரசிங்க முனையர்
குலம்: முனையர்
நாடு: நடுநாடு
பூசை நாள்: புரட்டாசி சதயம்
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.
பெயர்: 49) நின்றசீர் நெடுமாறன்
குலம்: அரசர்
நாடு: பாண்டிய நாடு
பூசை நாள்: ஐப்பசி பரணி
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
பெயர்: 50) நேச நாயனார்
குலம்: சாலியர்
நாடு: குடகு
பூசை நாள்: பங்குனி ரோகிணி
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.
பெயர்: 51) புகழ்சோழன்
குலம்: மரபறியார் அரசன்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆடி கார்த்திகை
எறிபத்தர் தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.
பெயர்: 52 ) புகழ்த்துணை நாயனார்
குலம்: ஆதி சைவர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆவணி ஆயிலியம்
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
பெயர்: 53 ) பூசலார்
குலம்: அந்தணர்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: ஐப்பசி அனுஷம்
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
பெயர்: 54) பெருமிழலைக் குறும்பர்
குலம்: குறும்பர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: ஆடி சித்திரை
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.
பெயர்: 55) மங்கையர்க்கரசியார்
குலம்: மரபறியார் அரசர்
நாடு: பாண்டிய நாடு
பூசை நாள்: சித்திரை ரோகிணி
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.
பெயர்: 56) மானக்கஞ்சாற நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: மார்கழி சுவாதி
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
பெயர்: 57) முருக நாயனார்
குலம்: அந்தணர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: வைகாசி மூலம்
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
பெயர்: 58) முனையடுவார் நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: பங்குனி பூசம்
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.
பெயர்: 59) மூர்க்க நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: சோழ நாடு
பூசை நாள்: கார்த்திகை மூலம்
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.
பெயர்: 60) மூர்த்தி நாயனார்
குலம்: வணிகர்
நாடு: பாண்டிய நாடு
பூசை நாள்: ஆடி கார்த்திகை
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.
பெயர்: 61) மெய்ப்பொருள் நாயனார்
நாடு: நடுநாடு
பூசை நாள்: கார்த்திகை உத்திரம்
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்
பெயர்: 62) வாயிலார் நாயனார் வேளாளர்
நாடு: தொண்டை நாடு
பூசை நாள்: மார்கழி ரேவதி
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.
பெயர்: 63) விறன்மிண்ட நாயனார்
குலம்: வேளாளர்
நாடு: மலை நாடு
பூசை நாள்: சித்திரை திருவாதிரை
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.
🙏🏻பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
🙏🏻பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
🙏🏻சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
🙏🏻திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
🙏🏻முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
🙏🏻முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
🙏🏻அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்
நலமோடு வாழ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 80 ஆன்மீக குறிப்புகள்
வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ்
Aadi pooram Prayers for getting baby பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்! ஆடி பூரம் 2024 தேதி… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
Aadi kiruthigai #ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!! - ஆடி கிருத்திகை 2024 தேதி மற்றும் நேரம்: ஆடி… Read More
Aadi Amavasai special ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் Aadi amavasai ********************************************** ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள்… Read More
ஆடிப்பெருக்கு: 3/8/2024 aadi perukku தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் ஒவ்வொரு… Read More
Aadi month special Festival News and Info ஆடி மாத சிறப்புகள் Aadi month special news -… Read More
Leave a Comment