காலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் :
❇ கிழக்கு முகம்பார்த்தால் ஆயுள் விருத்தி.
❇ தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம்.
❇ தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும்.
❇ தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும்.
❇ மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.
❇ வடமேற்கை பார்த்தால், புஷ்டியுண்டாகும்.
❇ வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும் – உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும்.
❇ இவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் இன்னல்கள் மறையும், இறைவனின் ஆசியால் நன்மைகள் நம்மை தேடி வரும்…
எந்த திசையில் தலை வைத்து கொண்டு படுத்தால் என்ன பலன்கள்
❇ நம் எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது. கிரகங்களும் காந்த முனைவுகளை கொண்டுள்ளது, நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது. இதை சாதாரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் பார்த்தாலே தெரியும்.
❇ திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும், எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும். இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள்.
❇ அதே நேரத்தில் தெற்கு, கிழக்கு பகுதிகளில் சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது. அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமல் எழுந்திருக்க முடியும்.
❇ நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது. மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது.
❇ இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது.
❇ மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத் தன்மையும், மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
❇ மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும். அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது, உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும்.
❇ இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More
Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _ _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 11* *ஏப்ரல்… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
Leave a Comment