ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள் (Jeevan Enbathu ullavarai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் மிக மெல்லிய இசையில் அமைந்தது… நம் ஏழைப்பங்காளன் ஐயப்பா சாமியை பாடி துதிக்க இந்த பாடல் மிக சிறந்த ஒன்றாகும்…
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
கார்த்திகை தோறும் மாலை அணிந்து
நாற்பது நாளும் நோன்பும் இருந்து
நாவில் ஐயன் நாமம் பொழிந்து
நடந்தே சென்று கோவிலடைந்து
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
நெய் விளக்காலே அலங்காரம்
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்
சரணம் என்னும் ஓம்காரம்
சர்வமும் அதிலே ரீங்காரம்
ஆசையில் மோதும் அலையாவும்
ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர
ஜோதியைக் கண்டால் தெளிவாகும்
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள நாட்டில் பணி முடித்தான்
பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள நாட்டில் பணி முடித்தான்
மகிஷியை வென்றே வாழ்வளித்தான்
மழலை வடிவில் அருள் கொடுத்தான்
அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்
அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த
அகிலமும் வாழவும் துணை இருப்பான்
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை….
Jeevan Enbathu Ullavarai Video Song in Tamil
ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
உன்னதமான சிம்மாசனத்திலே பாடல் வரிகள்
Kolaru Pathigam lyrics Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics) - நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
பசுமாடு ஸ்தோத்ரம் ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More
Leave a Comment