கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள் (Kattodu Kattumudi lyrics) – ஸ்ரீ ஹரி அவர்கள் பாடிய கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த பாடல் ஐயப்ப சாமியை பாடி வழிபட மிக சிறந்த ஒன்றானதாகும்…. சபரிமலை யாத்திரையை குறிப்பதாக அமைந்த பாடலாகும்…. மேலும் இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது
கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
குருசாமி சொல்லுபடி குருபாதை நல்லவழி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
எருமேலி வாசபடி விளயாட வேகபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கொட்டு முழக்கடிச்சி கோலாட்டம் போட்டபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
பூதாதி பூதகனம் காவலுக்கு நின்னபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
நந்தவன சாலைவழி நாதா உருவானபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
சாமி அடிமேல் அடியெடுத்து அய்யா நீ சொன்னவழி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா…
கட்டும் கட்டு பள்ளிகட்டு சபரிமலைக்கு
யாரை காண சாமியை காண சாமியை கண்டால் மோட்சம் கிட்டும்
மஹிஷி விழுந்த பள்ளம் மரியாதை செய்ய சொல்லும்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
கல்போடும் குன்று மேல மகிழ்ச்சியாக கல் எறிந்து
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
அயிலேலோ ஏத்தமுங்கோ அழுதமலை உசரமுங்கோ
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அழுது தொழுதபடி உச்சியிலே ஏறியாடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
பாறையிலும் முழுபாற கோட்டயில இளைப்பாற
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
முக்குழியில் முள்ளு குத்த அக்கறையில் நீ துடிக்க
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கட கடக்கும் காவலமாம் ஏற்றுவது உன் பலமாம்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
சாமி கட்டகரிமலையாம் கண்ணீறு தன்மலையும்
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கரிமலயின் ஏற்றத்திலே ஐயா உன் கை பிடிச்சி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
கரிமலயின் இறக்கத்திலே குருமிலகாய் உருண்டோடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
சுறுப்பா சுறுசுறுப்பா நடந்தாலே ஆனவட்டம்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
ஆனவட்டம் தொட்டுவிட்டு பம்பைஆற்றில் பாதம்விட்டு
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
தலையாம் தலைமுழுகி பம்பையாலே புனிதமாகி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
பம்பா விளக்கு விட்டு பசியாலே சோறும் விட்டு
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கட்டான கட்டெடுத்து கன்னிமூலம் காய் கொடுத்து
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
சாமி இருந்தாரே நீலிமலை சபரியம்மா வாழும் மலை
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
காலு வலுவலுக்க நீலிமலை மேலிழுக்க
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
பம்பா உன் கைத்தடியாம் கன்னிசாமி தொளிருக்க
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
அப்பாச்சி மேடுவர அப்பானு மூச்சிவிட
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
இப்பாச்சி பள்ளத்துல தப்பாம மூண்டவிட்டு
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
பீடம் சபரிபீடம் தேங்காயும் ரெண்டுப்படும்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
கொச்சி சரமும் குத்தி குடுகுடுனு ஓடிவந்து
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
சாமி படியாம் படியும் ஏற பரவசமே வந்து சேர
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா நடை திறக்க ஆனந்தமாய் நீ சிரிக்க
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
வந்தோமப்பா தரிசனம் கண்டோமப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்
லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்
Kattodu Kattumudi Video Song Lyrics in Tamil
Kolaru Pathigam lyrics Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics) - நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
பசுமாடு ஸ்தோத்ரம் ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More
Leave a Comment