ப்ரபோ கணபதே பாடல் வரிகள் (Prabho ganapathe lyrics) இந்த பதிவில் உள்ளது…. விநாயகரை வழிபட இந்த பாடல் மிக சிறப்பு வாய்ந்த ஒன்று… இந்த பாடல் வரிகள் இந்த பதிவில் படித்து, விநாயகரின் அருளை பெறுவோம்….
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாய…….
சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே (2)
ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே (2)
தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே(2)
ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே(2)
பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே….
பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்
Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More
ஏன் காலையில் சுப்ரபாதம் பாடுகிறோம் என்று தெரியுமா? விஸ்வாமித்திரரின் யாகத்தினை ஒருமுறை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள்… Read More
திருக்கடவூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் அபிராமிப்பட்டர். அவரின் வம்சத்தில் வந்தவர்தான் அம்பிகாதாசர. வெகு காலம் பிள்ளை இல்லாமல் இருந்து,… Read More
கடன் தீர வேண்டுமா? விநாயகருக்கு கொள்ளு தீபம் ஏற்றுங்கள் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோயில்… Read More
திருப்தி - திருப்தியாக எப்பொழுதும் இருக்கின்றோமா? தநமது சூழ்நிலைகள் எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றதா? சிலநேரங்களில் அதிருப்தி ஏற்படுவதற்கு என்னகாரணம்? மனம்… Read More
Hanuman prayer benefits tamil ஜெய் ஶ்ரீ ராம்.. ராம பக்த அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த… Read More
Leave a Comment