திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் வரிகள் (Thirupparkadalil song lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் 1975 ஆம் ஆண்டு ஸ்வாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம் பெற்றது… இந்த பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆவார்…. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.தேவராஜன் அவர்கள் மற்றும் பாடலை பாடியவர் திரு. கே.ஜே. ஜேசுதாஸ்…
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா …ஆ….ஆ….ஆ…..
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா – அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா – அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா ………ஆ……ஆ……ஆ…….
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? – அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? – உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே
வருவாயோ நீயே……ஏ…..ஏ…..ஏ……..
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
தோளிலந்த சாரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே – கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து
வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே ……………
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து
இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணனெனும் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
வேல் கொண்டு வாருங்கள் – இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே………
துணை தருவாய் பெருமாளே…………..!
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் வரிகள் காணொளி:
You can find this song by searching for thiruppar kadalil song lyrics in tamil or perumal songs in tamil
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 05* *ஏப்ரல்… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment