எந்த மலை சேவித்தாலும் பாடல் வரிகள் (Entha malai sevithalum lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… ஐயப்ப பஜனை பாடல்களில் இந்த பாடல் மிக சிறப்பான ஒன்றாகும்… நம் சபரிமலை ஐயனை போற்றி பாட இந்த பாடல் மிக சிறந்த ஒன்று…. ஒவ்வொரு சரணம் முடிவிலும் “எந்த மலை சேவித்தாலும்” என்று குழுவாக பாடும் போது இந்த பாடலின் தனித்தன்மை அனைவருக்கும் விளங்கும்… ஓம் சாமியே சரணம் ஐயப்பா…
ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க
ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா…
கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய்
நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே
ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா…
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
எந்த மலை சேவித்தாலும்
சபரிமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமலாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் ஐயன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை
பம்பா பாலன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார்
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே………….. சரணம் ஐயப்பா…
பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து பாடல் வரிகள்
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்
Entha Malai Sevithalum Video Song Lyrics Tamil
Kolaru Pathigam lyrics Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics) - நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
பசுமாடு ஸ்தோத்ரம் ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More
Leave a Comment