தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துகள்

*பொங்கல் பண்டிகையின் பூஜைக்கான நேரம் பற்றிய பதிவுகள் :*

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தை பொங்கல் பண்டிகை. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி, உத்தராயண, லோரி என கொண்டாடப்படுகிறது.

*தைப் பொங்கல் 2024 எப்போது?*

தைப் பொங்கல் வைத்து வழிபட முகூர்த்த நேரம்

இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் வைப்பதற்கான முகூர்த்த நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். இந்த நேரத்தை விட்டீர்கள் என்றால் அடுத்து, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்து வழிபடலாம். பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் இதுதான்.

அதே போல, திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக் கூடாது.

Leave a Comment