சிவபுராணம் பாடல் வரிகள் (Tamil Lyrics) தமிழில்! | PDF, Audio & பலன்கள்

சிவபுராணம் என்பது மாணிக்கவாசகர் அருளிய பன்னிரு திருமுறைகளில் ஒன்று. சிவபெருமானின் அருளையும், ஆன்மிக உயர்வையும் எடுத்துரைக்கும் இந்தப் பாடல், தினசரி பாராயணத்திற்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்தப் பதிவில் சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில், அதன் பொருள், பலன்கள் மற்றும் PDF தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிவபுராணம் பாடல் வரிகள் (தமிழில்)

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்….

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  (15)

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)

திருச்சிற்றம்பலம்!!!

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

Buy  திருவாசகம் புத்தகம்! – Click here to buy from Amazonசிறப்பு மிக்க திருவாசகம் புத்தக்தை இன்றே மிக குறைந்த விலையில் வாங்கி சிவபெருமானை திருவாசகம் பாடி வணங்குவோம்!

சிவபுராணம் காணொளி

Sivapuranam – Frequently Asked Questions (FAQ)

  1. சிவபுராணம் என்றால் என்ன?
    சிவபுராணம் என்பது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பாடிய சிவபெருமானை போற்றும் திருப்புகழ். இது சிவன் அருள் பெற பாடப்படும் ஒரு முக்கியமான பாடல் தொகுப்பாகும்.
  2. சிவபுராணம் பாடுவதால் என்ன பலன்கள்?
    சிவபுராணம் பாடுவது மனதை அமைதியாக்கி, பாப விமோசனம் அளிக்கிறது. மேலும், வீட்டில் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தி, குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் ஏற்படும்.
  3. சிவபுராணத்தை எந்த நேரத்தில் பாட வேண்டும்?
    சிவபுராணத்தை தினமும் காலையில் அல்லது மாலையில் பக்தியுடன் பாடலாம். பிரதோஷம், திருவாதிரை, மற்றும் சிவராத்திரி தினங்களில் பாடுவது சிறப்பு பயனை தரும்.
  4. சிவபுராணம் முழுவதும் உள்ள பாடல்களை எங்கு பெறலாம்?
    உங்கள் ஆன்மீக பயணத்திற்கு, aanmeegam.co.in இணையதளத்தில் சிவபுராணம் முழுமையாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
  5. சிவபுராணம் எப்படி நினைவில் கொள்ளலாம்?
    தினசரி ஒலி வடிவில் (audio) கேட்பது மற்றும் எழுத்து வடிவில் (text) வாசிப்பது மூலமும் சிவபுராணத்தை மனதில் பதிக்கலாம்.
  6. சிவபுராணத்தில் உள்ள முக்கியமான வரிகள் எவை?
    சில முக்கியமான வரிகள்:
    • “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க”
    • “பொன்னார் மேனி யானைப் பொதும்பு ழாகும்”
    • “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்றே நினைக்கில்லை”
  7. சிவபுராணம் பாடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்ன?
    • தூய்மையாக இருக்க வேண்டும்.
    • பக்தியுடன் உண்மையாய் பாட வேண்டும்.
    • அர்ச்சனை அல்லது தீபம் ஏற்றி பாடலாம்.
  8. சிவபுராணம் பாடுவதற்கு எதாவது புனித நாட்கள் உள்ளதா?
    • சிவராத்திரிபிரதோஷம்திருவாதிரைகார்த்திகை தீபம்அருட்பெருஞ்ஜோதி தினம் போன்ற தினங்களில் சிவபுராணம் பாடுவது சிறப்பாகும்.
  9. சிவபுராணம் மற்றும் திருவாசகம் எந்த விதத்தில் தொடர்புடையவை?
    சிவபுராணம் திருவாசகத்தின் ஒரு பகுதி. திருவாசகம் முழுவதும் மாணிக்கவாசகர் அருளிய பாடல்களாகும், இதில் சிவபுராணம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
  10. சிவபுராணம் எந்த அளவு சிறப்பு வாய்ந்தது?
    சிவபுராணம் பாடும் ஒருவருக்கு மோட்சம், சிவ அருள், பாவ நிவாரணம், மற்றும் நல்ல ஒழுக்கம் கிடைக்கும். இதனை உணர்வுபூர்வமாக பாடினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

மேலும் இந்த பாடல் மட்டுமல்லாது வேறு சிவபெருமானின் பாடல்களும் உள்ளது… இதனை படித்து பலன்களை பெறவும். ஓம் நமசிவாய. சிவாய நமஹ. திருச்சிற்றம்பலம்…

சிவபெருமான் காயத்ரி மந்திரம் 1

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவபெருமான் காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

Join our WhatsApp Group 4

Some of the popular articles that you might be interested similar to Sivapuranam song lyrics is given below for your reference.

1008 திருலிங்கேஸ்வரர்கள் 

108 சிவபெருமான் போற்றி

துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம்

சிவபெருமான் பாடல்கள்

போற்றித் திருஅகவல் திருவாசகம் பாடல் வரிகள்

இடரினும் தளரினும் பாடல் வரிகள்

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்

Follow Aanmeegam WhatsApp Channel

திருச்சிற்றம்பலம்!!!

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

“நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே, சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே….” இந்த வரிகள் S P subramanian அவர்களின் பாடலில் இடம் பெறும்..  ஆனால் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடல் வரிகளில் அமையாது… இது ஒரு கூடுதல் செய்தி..

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது…. தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம்.

திருச்சிற்றம்பலம்….. தில்லையம்பலம்……

சிவபுராணம் பாராயணம் செய்வதன் பலன்கள்

சிவபுராணம் பற்றிய சிறு குறிப்பு:
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதியே சிவபுராணம் ஆகும். சிறப்புகள் பெற்ற திருவாசகத்தின் முதற் பகுதியாக சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ளது. சிவபுராணமானது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்து போற்றுகிறது. அதோடு உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்த தத்துவ நோக்கில் எடுத்துக் கூறுகின்றது. எளிய தமிழில் இயற்றப்பட்டிருக்கும் இப்பாடலின் பெரும்பாலான பகுதிகள் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தற்காலத்திலும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது சிறப்பு.

மாணிக்கவாசகர் பற்றிய சிறு குறிப்பு:
மதுரை மாநகரத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருளும் தலம் திருவாதவூர். அன்றைய கால கட்டத்தில் தென்னாட்டில் புத்தம் மேலோங்கி, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவனின் திருவருளால் சைவம் தழைக்கவும், வேத சிவாகமநெறிகள் விளங்கவும் மாணிக்கவாசகர் அந்த ஊரில் அவதரித்தார். தாய் தந்தையர் மனம் மகிழ்ந்து அவருக்கு திருவாதவூரார் என்று பெயரிட்டனர்.

  • மன அமைதி மற்றும் ஆன்மிக தெளிவு கிடைக்கும்

  • சிவபெருமானின் அருள் பெற வழிவகுக்கும்

  • பாவங்கள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்

  • தினசரி பாராயணத்திற்கு மிகவும் உகந்த பாடல்

  • சிவ பக்தியை ஆழப்படுத்தும் சக்தி கொண்டது

You can search this article with below search terms thiruvasagam vilakkam in tamil, sivapuranam story in tamil, sivapuranam spb mp3 free download, sivapuranam song in tamil, Sivapuranam Lyrics, namasivaya vazhga full mp3 song download, manickavasagar thiruvasagam in tamil..

Related Products:

Beautiful Pooja Mandap for your home at the lowest price – 64% OFF – M.R.P.: ₹2198.00  ONLY 

Buy 9 inch Antique Bronze shiva linga at 72% OFF – M.R.P.: ₹23,999.00  ONLY 

Buy Ancient Brass Shivalingam – 8.5 CM height – MRP 22001600 – Buy Now in Amazon

Buy Copper Kalasam for your Pooja room – 34% OFF –  ONLY at 1980 – Buy Now in Amazon

29 Comments

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)