Mannanalum thiruchenduril lyrics tamil – மண்ணானாலும் திருச்செந்தூரில் பாடல் வரிகள்

திரு. T.M. சௌந்தரராஜன் அவர்கள் பாடிய முருகர் பக்தி பாடல்களில் இந்த பாடல் நம் மனதை நெகிழ வைக்கும் ஒன்றாக அமைகிறது.  மண்ணானாலும் திருச்செந்தூரில் (Mannanalum thiruchenduril lyrics tamil)

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

பாடியவர்: டி.எம்.எஸ்

வேலும் மயிலும் சேவலும் துணை

வேல்மாறல் பாடல் வரிகள்

சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள்

திருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில்

108 முருகர் போற்றி

 

Leave a Comment