🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

🌙 *இன்று சந்திர தரிசனம்* 🌙

🌙 *நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!*

🌙 மூன்றாம் பிறை தரிசனம் என்பது முற்பிறவி பாவத்தைப் போக்கும் வல்லமைப் பெற்றது என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத் தான் அமாவாசை என்கிறோம்.

🌙அதே போல் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளை, மூன்றாம் பிறை நாள் என்கிறோம். அமாவாசைக்கு அடுத்த நாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறை ஆகும்.

🌙மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையை தான் சிவபெருமானார் தன்னுடைய முடியில் அணிந்திருக்கிறார்.

🌙மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

🌙 மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌙மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌙மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌙மூன்றாம் பிறையை கண்டால் சகல பாவங்களும் தொலையும், மேலும் முற்பிறவி பாவம் போக்கும், செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

🌙இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம்.

Leave a Comment