வசதிகள் ஆயிரம் இருந்தாலும் , மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை ஆகும் . அனால் ஆனால் பிரச்னை இல்லாத மனிதர் எத்தனை பேர் ? எந்த ஒரு பிரச்சனையால் மனம் துன்பமுற்றாலும் , அதை மாற்றி அமைக்கும் மன அமைதி நலகும் இறைவன் , மஹா விஷ்ணு .
மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக நிறைந்திருப்பவர் . அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

ஒரு பௌர்ணமி அன்று , மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று , செல்வம் சேரும், புகழ் கிட்டும் , பொருளாதார சிக்கல் தீரும்.

மஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் :

நிறை நாழி நெல் , துளசி தளம் , வாசனை திரவியங்கள் , இனிப்பு பலகாரங்கள் , நெற்பொரி , செங்கதலிப்பழம் , பால் , தேன் , இளநீர் , துருவிய தேங்காய் , வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த
அவல் , கற்பூரம் , ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .

பௌர்ணமியன்று , வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து , கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும் .

துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும் . பின் அதற்கு மஞ்சள் , குங்குமம் திலகமிடவும் . அதனருகே , நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி , அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் செய்த விநாயகரை வைத்து , மஞ்சள் குங்கும திலகமிடவும் .

வீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ அவரை பூஜை செய்ய சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து
கற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர
தூபம் காட்டி , ஸ்ரீ மஹாவிஷ்ணு தோத்திரம் , மஹாவிஷ்ணு நாமாவளி கூறி , துளசி தாழ் அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் வணங்க வேண்டும். .

இறைவனுக்கு படைத்த பிரசாதங்களை , பிறருக்கு கொடுத்து விட்டு பின்னரே வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் மன மகிழ்ச்சியும் , குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லா நன்மைகளும் கிட்டும்.

Leave a Comment