பெருமாளின் ஐந்து நிலைகள் மற்றும் தரிசனம் தரும் ரூபங்கள் பற்றிய விளக்கம்…

அடியார்களுக்கு அருள் புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை,

1. பரநிலை – வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன்.

2. வியூஹ நிலை – தேவர்களின் குறை கேட்டு அவர்களுக்கு அருள்புரிவதற்குத் தயாராகப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள்.

3. விபவ நிலை – மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்.

4. அந்தர்யாமி நிலை – அனைத்து உயிர்களுக்குள்ளும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இறைவன்.

5. அர்ச்சை நிலை – கோயில்களிலும் நம் இல்லங்களிலும் நமக்கு அருள்புரிவதற்காக விக்கிரக வடிவில் காட்சி தரும் இறைவன்.

108 திவ்ய தேசங்கள்