Aditya Hrudayam Lyrics in Tamil

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் (Aditya Hrudayam Lyrics in Tamil) –  எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பொருள் இந்த பாடல் வரிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது…

Aditya Hrudayam Lyrics – ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: (1)

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (2)

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3)

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் (4)

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் (5)

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: (6)

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி: (7)

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர: (8)

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர: (9)

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் (10)

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: (11)

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம: (12)

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: (13)

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே (14)

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம: (15)

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம: (16)

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: (17)

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம: (18)

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: (19)

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே (20)

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: (21)

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம் (22)

வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: (23)

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ: (24)

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி (25)

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் (26)

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான் (27)

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான் (28)

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் (29)

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி (30)

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பொருள்

ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த
அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட
ராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.

மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த
மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல
முடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை
உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.

எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை
அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும்அளவற்ற உடல் வலிமையை
தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற
ஸ்தோத்திரத்தை நீஅனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம்,
சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.

எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு
மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,
உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா
மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.

ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்
தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும்எல்லா
ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்
ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.

எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக
உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்தசூரியனே.

இவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும்
பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும்குபேரனாகவும் காலமாகவும்
யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.

இந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற
தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்தமருந்துகளாகவும்
மனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும்,
பிராணனாகவும் பருவ காலங்களைஉருவாக்குபவராகவும்
ஒளி பரப்புபவராகவும் திகழ்கிறார்.

இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.
கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில்சஞ்சரிப்பவர். மழையால்
உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.
பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.
பகலை சிருஷ்டித்தவர்.

பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான
கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ளகுதிரையை உடையவர்.
பிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர்.
உலகையே ஸம்ஹாரம்செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே
உருவானவர்.

தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத,
லோப குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக்கொடுப்பவர்.
ஒளி மிகுந்தவர். எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத்
தன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர்.அதிதியின் புத்திரன். ஆகாசம்
முழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.

இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர்,
ஸாம வேதங்களுடையப் பொழிவானஉபநிஷத்துகளால்
கொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர்.
நல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர்.தட்சிணாயனத்தில் விந்திய மலை
வழியாக சஞ்சரிப்பவர்.

இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர்.
நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில்அனைவருக்கும்
தாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும்
உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச்செல்பவர். தேஜஸ் மிகுந்தவர்.
எல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும்
காரணமானவர்.

அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள்
எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக்காப்பாற்றுகிறவர்.
அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு
உருவங்களாக இருப்பவர்.இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே
நமஸ்காரம்

கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு
திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம்.நட்சத்திரங்களுக்கும்
கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.

என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே,
பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம்.ஆயிரக்கணக்கான கிரணங்களைக்
கொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.

பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே
நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே,உலகிலேயே முதலில்
உண்டா னவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.

பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே,
சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும்கொடுக்கப்படும்
ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே, நமஸ்காரம்.

இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே,
அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியைமறப்பவரை வீழ்த்துபவரே,
நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.

உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை
உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப்போக்குபவரே, பிரகாசம் மிகுந்த வரே,
உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.

மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும்
உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரேபாதுகாக்கிறார். இவரே
தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை
பொழிய வைக்கிறார்.

பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன்
விழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம்வளர்க்கும் அக்கினியாகவும்
அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.

வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும்
உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாகஇந்த
சூரியனே விளங்குகிறார்.

ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம்
நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள்எப்போது
ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து
எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம்தோன்றினாலும் சரி, அப்போது
மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத்
துன்பமும் நெருங்கமுடியாது, ராகவா!

ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே அதிபதியும் ஆன இந்த சூரியனைவழிபடுவாயாக. இந்த ஸ்தோத்திரத்தை
மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.

மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று
வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி,அகத்தியர் ராமனை
ஆசிர்வ தித்து விட்டுச் சென்றார்.

அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும்
நீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புதுஉற்சாகத்துடன்
மேற்க ண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.

மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப்
பார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும்,புதுப்பிக்கப்பட்ட
தன் னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.

மகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து
பரமானந்தத்தை அடைந்தார். திடமானமனோபலத்துடன் ராவணனுக்கு
எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற
எண்ணத்தைமனத்திண்மையாகக் கொண்டார்.

அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்…

ஆதித்ய ஹ்ருதயம் பலன்கள்

மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ
ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம்
செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும்
ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது…. ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும்இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.  பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும்.

பல நன்மைகள் தரும் நவகிரக மந்திரங்கள்

சூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள்

ரத சப்தமி வரலாறு

Leave a Comment