Siva temple miracles:

அதிசய சிவ தலங்கள்…!

நம் நாட்டில் பல்வேறு திருத்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு. அதேபோல் அவற்றில் சில அதிசயங்களும் உண்டு. அப்படி அதிசயங்களும், சிறப்புகளும் மிக்க கோவில்களைப் பற்றிப் பார்ப்போம்….!

Lord shiva🌟 கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

🌟 விஸ்வநாதர் கோவிலில் மாலைவேளை பூஜையின் போது நூற்றி எட்டு ‘வில்வ” இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். அந்த நூற்றி எட்டு ‘வில்வ” இலைகளிலும் சந்தனத்தால் ‘ராமா” என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.

🌟 கும்பகோணம் அருகே திருநல்லு}ரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் ‘பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

🌟 கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

🌟 ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

🌟 சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் அஷ்ட பைரவர் எனும் 8 பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறப்பார்களாம்.

🌟 திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது….

Leave a Comment