Oraru Mugamum song lyrics tamil | ஓராறு முகமும் ஈராறு கரமும் பாடல் வரிகள்

ஓராறு முகமும் ஈராறு கரமும் பாடல் வரிகள் (Oraru Mugamum song lyrics tamil) என்பது முருகனைப் பற்றிய தமிழ் பக்திப் பாடல்.

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன்

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்….

கந்தனை மனமுருக வணங்கி இந்த பாடலை துதித்து சுப்பிரமணிய கடவுளின் அருளை பெறுவோம்…

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

பண்பொழி ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

Leave a Comment