Shiva Tandava Lyrics in Tamil

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் (Shiva tandava lyrics in tamil) – சிவபெருமானின் சிவதாண்டவ ஸ்தோத்திரம் மிக சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் ஆகும்…  இந்த பதிவில் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் காணொளி,  மற்றும் சிவதாண்டவ பாடல் வரிகள் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது…

ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்
டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்
சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்

ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி
விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி
தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே
கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா

தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி
க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி

ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா
கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே
மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி

ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர
ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ
புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக
ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர

லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா
நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்
சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்
மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ

கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல
தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே
தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம

நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்
குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ
நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ
கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ

ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா
வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம் |
ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்
கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே

அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி
ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்
ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே

ஜயத் வதப்ர விப்ரம ப்ரமத் புஜங்க மஸ்வஸ
த்வினிர்க மத்க்ரம ஸ்புரத் கராள பால ஹவ்ய வாத்
திமித் திமித் திமித் வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனி க்ரம ப்ரவர்தித ப்ரச்சண்ட தாண்டவஃ சிவஃ

த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்
கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்
த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்
சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே

கதா நிலிம்ப நிர்ஜரீ நிகுஞ்ச கோதரே வஸன்
விமுக்த துர்மதி ஸதா ஸிரஃ ஸ்த மஞ்சலிம் வஹன்
விலோல லோல லோச்சனோ லலாம பால லக்னகஃ
சிவேதி மந்த்ர முச்சரண் கதா ஸுகீ பவாம் யஹம்.

இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்
பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்
ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்
விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்

பூஜா வசான ஸமயே தச வக்த்ர கீதம்
யஃ ஸம்பு பூஜானா பரம் பததி ப்ரதோசே
தஸ்ய ஸ்திராம் ரத் கஜேந்த்ர துரங்க யுக்தம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஸம்புஃ

இதி ஸ்ரீராவண க்ருதம்
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
சம்பூர்ணம்….

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் காணொளி

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு….

ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத்து வரச் சொல்லி நாரதர் ராவணனுக்கு அறிவுறுத்தினார். ராவணனுக்கு கர்வம் அதிகம் என்பதால் ஒட்டுமொத்த கைலாய மலையை வேரோடு எடுத்து வர எண்ணி, மலையைத் தூக்கினான். மலையைத் தூக்க விடாமல் தடுக்க, சிவபெருமான் தனது காலில் பெருவிரலால் நிலத்தை அழுத்தினார்.

இதனால் பாரம் தாங்க முடியாத ராவணன் பாதாளத்திற்கு சென்றான். சிவபெருமானின் பெருவிரல் சுமையால் நசுக்கப்பட்ட ராவணன் வலியால் துடித்து ஒரு துதி பாடினான். அந்தத் துதியால் மூவுலகும் நடுங்கியது. பின்னர், இந்த துதி பாடியதால் சிவபெருமான் ராவணன் என்ற பெயரை வழங்கினார். இந்த பெயர் சிவபெருமானால் கொடுக்கப்பட்டது என்பதால் ராவணனுக்கு அவனுடைய இந்தப் பெயர் மிகவும் இஷ்டம்.

தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்த பின்னரும், ராவணனால் அந்த மலையைத் தூக்க முடியவில்லை. அதன்பின்னர், தொடர்ந்து 14 நாட்கள் சிவ மந்திரத்தை ஜெபித்து வந்தான். ஒரு பிரதோஷ தினத்தன்று மாலை வேளையில் சிவபெருமானை மகிழ்விக்க ராவணன் இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினான். சரியான தாளத்தில் மிகுந்த பக்தியுடன் பிரதோஷ காலத்தில் இந்த பாடலைப் பாடினான் ராவணன்.

ராவணனின் பக்தியைக் கண்டு, இந்த சக்தி மிகுந்த மந்திரத்தைக் கேட்டு, சிவபெருமான் புன்முறுவல் புரிந்தார். பார்வதி தேவி ராவணன் மீது பரிதாபம் கொண்டு, அவனை விடுவிக்கச் சொல்லி சிவபெருமானிடம் கூறினார். அதனால் சிவபெருமான் ராவணனை விடுவித்து, அவனுக்கு பல வரங்கள் கொடுத்து சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிய ராவணனுக்கு ஆசிகள் வழங்கினார்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பொருள்

அடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, “டம டம” என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக…

சுருள்சடையாலான குளத்தில் அலைவீசி ஆடும் கங்கையும், திருநெற்றியில் கனல் வீசும் தீயையும், இளம்பிறையை அணிகல்னாகவும் கொண்டுள்ள சிவனை நான் போற்றுகின்றேன்

பரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன்.

வாழ்க்கைக்கு ஆதாரமானவனும், கொடியொத்த கழுத்து நாகத்தின் செங்கபில நிற நாகமாணிக்கம் எங்கும் ஒளிவீசித் தென்படத் திகழ்பவனும், பல திசைகளும் நிறைந்து (உன்னைப் போற்றும்) மாதரின் முகங்களில், அந்த மாணிக்கத்தின் கதிர்கள் பலவண்ணக் கோலமிடவும், மதயானையின் உருபோர்த்து அருளொளி வீச அமர்ந்திருப்பவனுமாகிய சிவனைக் கண்டு என்னுள்ளம், களித்தாடுகின்றது.

சகோரப்பறவையின் தோழனை (நிலா) தலையணிகலனாகக் கொண்டவனும், செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவனும், அரி – இந்திராதி தேவர்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் மகரந்தத் தாதினால் சாம்பல் நிறமாகக் காணப்படும் பாதங்களை உடையவனுமான ஈசன் எமக்கு சகல வளங்களும் நல்குக.
தேவநாகரி.

இளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக..

முக்கண்ணனும், நுதல்விழியிலிருந்து தகதகவென எரியும் தீயால், காமனை எரித்தவனும், மலையரசன் மகளின் மார்பில் தொய்யில் எழுதி மகிழ்பவனுமான ஈசனைப் பணிகின்றேன்.

உலகெலாம் தாங்குபவனும், பிறையணி அழகனும், பொன்னார் மேனியனும், கங்கையணி வேணியனும், முகில் நிறைந்த
இரவை ஒத்த கருநிறக் கழுத்தனுமான ஈசன் எமக்கு மங்கலம் அருள்க!

உலகன் கரும்பாவன்கள், மலர்ந்த நீலத்தாமரைகள் எனக் காட்சியளிக்கும் கறைக்கண்டனும், மதனனை எரித்தவனும், முப்புரம் காய்ந்தவனும், பற்றுக்களை அறுப்பவனும், தக்க வேள்வியை அழித்தவனும், அந்தகனை வதைத்தவனும், கயாசுரனை அழித்தவனும் இயமனை உதைத்தவனும் ஆன ஈசனைப் பணிகின்றோம்..

வண்டார்க்கும் கடம்ப மலர்களைச் சூடியவனும், மதனன், முப்புரம், பற்றுக்கள் வேள்சி, அந்தகன், கயாசுரன், இயமன் ஆகியோரை ஒழித்தவனுமான ஈசனைப்
பணிகின்றோம்.

திமிதிமி என மிருதங்கம் ஒலியெழுப்ப, அதற்கு இசைந்தாடுபவனும், நுதல்விழியில் தீயைக் கொண்டவனும், தீகக்கும் மூஉச்சைக் கொண்ட நாகம் சீறத் திகழ்கின்றான் சிவன்.

மக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ? புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ? நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ? மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ? மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ? சொல்க என் இறைவா!

கங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ? என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ? அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க.

இம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை…

தினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக.

இதி ஸ்ரீராவண க்ருதம்
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
சம்பூர்ணம்…

தென்நாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலைமலையானே போற்றி போற்றி
இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெறுக..

 

Leave a Comment