Sudarshana 108 names & Gayatri Mantra

சுதர்சன காயத்ரி மந்திரம் ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரம் சுதர்சன 108 நாமங்கள் | Sudarshana 108 names

ஓம் சுதர்ஹநாய வித்மஹே!!
மஹாஸ்வாலாய தீமஹி!!
தன்னோ சக்ரஹ்; ப்ரசோதயாத்!

பலன் தரும் இந்த ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரத்தை தினமும் சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்து வந்தால் நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!!

பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்!! கீழே 108 சுதர்சனர் நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளது… 

108 names of sudharsana | sudharsanar 108 potri in tamil

ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி
ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி
ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி
ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி
ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி
ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி
ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி
ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி!!

ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி
ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி
ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி
ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி
ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி
ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி
ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி
ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி
ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி!!

ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி
ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி
ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி
ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி
ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி
ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி
ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி
ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி
ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி!!


ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி
ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி
ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி
ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி
ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி
ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி
ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி
ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி
ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி
ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி!!

ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி
ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி
ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி
ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி
ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி
ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி
ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி
ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி
ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி
ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி!!

ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி
ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி
ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி
ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி
ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி
ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி
ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி
ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி
ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி
ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி!!

ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி
ஓம் முக்கண்களை உடையவரே போற்றி
ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி
ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி
ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் ருத்ரப் பிரியரே போற்றி
ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி
ஓம் மஹா வீரரே போற்றி
ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி!!

ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி
ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி
ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி
ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி
ஓம் சிவப்ரியரே போற்றி
ஓம் மஹா பலரே போற்றி
ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி
ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி
ஓம் மஹா சூரரே போற்றி
ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி!!

sudarshanar

ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி
ஓம் தர்மராஜரே போற்றி
ஓம் சமத்துவமுடையவரே போற்றி
ஓம் தண்டதரரே போற்றி
ஓம் தபஸ்வியே போற்றி
ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி
ஓம் சர்வக்ஞரே போற்றி
ஓம் புண்ணிய மித்திரரே போற்றி
ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி
ஓம் மிக பயங்கர வாதியே போற்றி!!

ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி
ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி
ஓம் பாவிகளின் எமனே போற்றி
ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி
ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி
ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி
ஓம் கோரமானவரே போற்றி
ஓம் பயங்கரரே போற்றி
ஓம் திருப்தியுற்றவரே போற்றி
ஓம் ஸம்ஹாரியே போற்றி!!

ஓம் குளிரச் செய்பவரே போற்றி
ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி
ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி
ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்ஸனரே போற்றி போற்றி!!

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து
வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்…!

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும்
அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து
உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளை என்பது நரசிம்மருக்கு கிடையாது . துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற் பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒரு சேர
வழிபடுவது மிகச் சிறப்பு. இதன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் ஸ்ரீநரசிம்மர் இருப்பார்…!

*ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை தரிசித்தால்*

#ஸ்ரீ_சக்கரத்தாழ்வாரை
#தரிசித்தால்

சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

1. சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.

2. சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம்.

3. சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.

4. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

5. கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

6. சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

7. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு…!

8. நரசிம்ம அவதாரத்தில் அரக்கனின் வரத்தையட்டி எந்த ஆயுதமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தபோது, அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.

9. வாமன அவதாரத்தில், சுக்ராச் சாரியாரின் கட்ட ளையை மீறி மகாபலி வாமனனுக்குத் தானம் கொடுக்க தாரைவார்த்தபோது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப்பாதையை அடைத்தார். அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரி யார் தன் கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே.

10. சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோவில்களில் தனிச்சந்நிதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதர்கோவில், திருமாலிருஞ் சோலை (கள்ளழகர்) கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துகொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நிதி அமைக்கப் பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

11. சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர்.

12. சக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தி பெற்ற சுலோகமாகப் பிரபலமாகியுள்ளது.

13. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார்,ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார் ‘என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.

14. ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும்,16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.

15. மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்,கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.

16. முன்புறத்தில்ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

17. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

18. ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,”ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம “என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.

19. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

20. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

21. திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது.

22. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

23. திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற் கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

24.பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம்.

25. திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

26. பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

27. பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு.

28. சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ் வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகாமுனியால் ஏற்படுத்தப்பட்டவை.

29. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.

30.ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது ..

பஜ கோவிந்தம் பாடல் வரிகள்

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள்

Leave a Comment