வேல் விருத்தம் பாடல் வரிகள் | Vel Virutham Lyrics in Tamil

திரு அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் (Vel Virutham)

1. மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி
மதியும்இர வியுமலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்

சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே

செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்

தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி
தருகவுளும் உறுவள் எயிறுந்

தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
தருதுணைவன் அமரர்குயிலுங்

குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
குயமொடமர் புரியுமுருகன்

குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
குலையவிடு கொடியவேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

2. வெங்காள கண்டர்
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ

சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்

சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

3. வேதாள பூதமொடு
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்

வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்

அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்

தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்

தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்

போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

4. அண்டர் உலகும் சுழல
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
அங்கியும் உடன்சுழலவே

அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே

மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
மாணப் பிறங்கியணியும்

மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போல்

தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்

கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்

கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

5. ஆலமாய் அவுணரு
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மைஒளிமீ

தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன்ப ருக்கு முற்றா

மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்கு மெட்டா

முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழு முத்தும்

இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருந்

தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்

தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
சரவணக் குமரன் வேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

6. பந்தாடலிற்கழ
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
பாடலினொ டாடலின்எலாம்

பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்

தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரஉப தேச நல்கும்

வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்

கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கைவேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

7. அண்டங்கள் ஒருகோடி
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினால்

அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
அறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்

கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன்மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
மங்கையும் பதம்வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

8. மாமுதல் தடிந்து
(பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)

மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்

வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்

தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா

உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்

சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்

துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்

சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா

தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.

செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index

9. தேடுதற் கரிதான

தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து
சேவடி பிடித்ததெனவும்
நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
நிகழ்கின்ற துங்கநெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
றடலெரிக் கொடிய உக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே
சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
றாய்திமித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேலே.

10. வலாரியல லாகுலமி

வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.

சஸ்திர பந்தம்

வேல் மாறல் பாடல் வரிகள்

2 Comments

Leave a Comment