Aani Thirumanjanam
ஆனி திருமஞ்சனம் | Aani Thirumanjanam 2025 Date
ஆனி திருமஞ்சனம் ஜூலை 2, 2025 அன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
தில்லை சிதம்பரத்தில் பத்து நாள் ஆனி உத்திர தருசன விழா ஜூன் 23 (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஜூலை 2ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் தொடங்கும். ஆனி உத்திர தரிசனம் ஜூலை 2 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இருக்கும்
சிதம்பரம் அட்டவணை:
சிதம்பரத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழாவின் முக்கிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
23 ஜூன் 2025 (திங்கட்கிழமை)
— காலை: காலை முதல் – லக்னம் – த்வஜாரோஹணம் (கோடியேத்திரம்)
— இரவு: தங்க, வெள்ளி மஞ்சம் – பஞ்சமூர்த்தி வீதி உலா
24 ஜூன் 2025 (செவ்வாய்) – இரவு – வெள்ளி சந்திர பிரபை வாகனம்
25 ஜூன் 2025 (புதன்கிழமை) – இரவு – தங்க சூர்ய பிரபை வாகனம்
26 ஜூன் 2025 (வியாழன்) – இரவு – பூத வாகனம் (வெள்ளி)
27 ஜூன் 2025 (வெள்ளிக்கிழமை) – இரவு – வெள்ளி ரிஷப வாகனம்
28 ஜூன் 2025 (சனிக்கிழமை) – இரவு – கஜ (யானை) வாகனம் (வெள்ளி)
29 ஜூன் 2025 (ஞாயிறு) – இரவு – தங்க கைலாச வாகனம்
30 ஜூன் 2025 (திங்கட்கிழமை) – இரவு – தங்க ரதத்தில் பிக்ஷாடனர்
1 ஜூலை 2025 (செவ்வாய்கிழமை) – காலை – மகா ரதோத்ஸவம் (தேரோட்டம்)
— காலை: காலை முதல் – லக்னம் – ரத யாத்ரா தானம்
— இரவு: ராஜசபையில் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறும்
2 ஜூலை 2025 (புதன்கிழமை) – ஆனை திருமஞ்சனம்
— இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகம் (அதிகாலை)
— ஆனை உத்திரம் தரிசனம் சுமார் மதியம் 2 மணியளவில் IST
3 ஜூலை 2025 (வியாழன்) – இரவு – முத்து பல்லக்கு
ஆனி திருமஞ்சனம் என்பது என்ன?
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.
ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர். பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.
நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.
தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபை என்றும், அரசம்பலம் என்றும் பெயர். இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்…