Kadaga rasi guru peyarchi palangal 2023-24

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kadaga rasi guru peyarchi palangal 2023-24

மென்மையான மனமும்… சிந்தித்து செயல்படும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!

கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

கடமை உணர்வு கொண்ட நீங்கள், எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே…!

கர்ம ஸ்தான குரு – கடகம்

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான தனுசுவிற்கும், 9-ம் இடமான மீனத்திற்கும் உரியவர் ஆவார். பத்தாமிடமும் ஜீவன ஸ்தானமான மேஷத்திற்கு வருவதும், அவரது விசேஷ பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 2மிடம் (வாக்கு ஸ்தானம்),4மிடம் (மாத்ரு ஸ்தானம்),6மிடம்( சத்ரு ரோக ஸ்தானம்) ஆகிய இடங்களில் பதிவதும் கணக்கில் கொல்லப்பட்டு இந்த பலன்கள் சொல்லப்படுகின்றது. இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு குரு உச்ச வீடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
குருவின் 5ம் பார்வை கடக ராசிக்கு 2ம் வீடான வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பார்.
குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் வீடான சுக, தாய் ஸ்தானத்தைப் பார்ப்பார்.
குருவின் சிறப்பு பார்வையான 9ம் பார்வை ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தைப் பார்ப்பார்.
குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறக்கூடியவர் என்பதை நினைவில் கொள்வோம்.

எனவே 10ல் குரு இருக்கக்கூடிய காலத்தில் சில கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு தான் பார்க்கும் வேலையில் பதவி பறிபோக வாய்ப்புள்ளது.
தொழில் செய்பவர்கள் தன்னுடைய போட்டியாளர்கள், உடன் இருப்பவர்களின் பொறாமை காரணமாக உங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் சீராக இருக்கும். பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்க வேண்டாம். சிலருக்கு உங்கள் தொழிலில் உன்னத நிலை அடையலாம்.
வெளிநாட்டுத் தொழில் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சிலரின் வழிகாட்டுதல் தவறாக மாறலாம்.

சிலருக்கு பணியிடத்தில் மறைமுக எதிரிகள் உண்டாக வாய்ப்புள்ளது. இருப்பினும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமை மற்றவர்களுக்கு புரிய வரும்.
நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நம்பிக்கையும், விடா முயற்சியுடனும் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உறுதி.

குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்தாலும், உங்களுக்கு மனதில் நிம்மதி தருவதாக இருக்கும். சுப காரியங்கள் கைகூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனக் கசப்பு வந்தாலும் உங்களின் உறவில் மேன்மையும், நெருக்கமும் உண்டாகும்.

கொடுக்கல் வாங்களில் கவனம் தேவை. சரியான ஆதாரங்களுடன் செயல்படவும். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு அனுகூலம் தரும்.
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானமாக இருப்பது அவசியம்.
குழந்தை வரத்திற்காக முயல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைக்கும்.

குரு மேஷத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் வயிறு தொடர்பான பிரச்னைகள், உணவு குழாய் போன்ற பிரச்னை ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது நலம்.

அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சிக்கல்கள் வந்தாலும் அதை தீர்த்து வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள். இருப்பினும் இந்த குருவின் அமர்வு காலத்தில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் கவனமாக செயல்படுத்துவது அவசியம்.

மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். அதே சமயம் படிப்பைத் தவிர்த்து வேறு விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். படிப்பில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை தொடலாம்.
கலைத் துறையினருக்கு வளர்ச்சித் தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகளால் வெற்றியும் மன நிம்மதியும் அடைவீர்கள்.

கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். பத்தில் குரு வரப்போவதால் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் வம்பு வைத்துக்கொண்டால் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.

பரிகாரம்
சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும்போது திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். மாற்றமும் முன்னேற்றமும் நிச்சயம் இருக்கும். அஷ்டம சனி நடப்பதால் கடக ராசியினர் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.
அடிக்கடி சிவன் கோவிலுக்கு செல்வதும் அங்குள்ள நவகிரகங்களை வழிபட்டு வருவது நல்லது.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

 

Leave a Comment