Kanni rasi guru peyarchi palangal 2023-24

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kanni rasi guru peyarchi palangal 2023-24

கவனம் எதில் இருந்தாலும்… தன் கடமை தவறாத கன்னி ராசி அன்பர்களே…!!

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே…!

அஷ்டம குரு – கன்னி

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானமான எட்டாவது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே விரயம்(12-மிடம் ) வாக்கு(2-மிடம்) தாய்(4மிடம் ) ஸ்தானங்களில் பதியும்.
குருப்பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் உங்க ராசிக்கு 7வது வீட்டான கலஸ்த்திர ஸ்தானத்திலிருந்து 8வது வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். இதனால், திருப்புமுனை நிறைந்த காலக்கட்டமாக இருந்தாலும், கவனம் சூழந்த காலக்கட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், குருபகவான் உங்க ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்வது என்பது பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அள்ளிக்கொடுத்திருப்பார். ஆனால், இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதிகளவிலான நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.

அஷ்டம குருவால் மனக்குழப்பங்கள் அதிகரித்து, இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும். அதேபோல், இந்த காலக்கட்டத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடமும் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துபோவது நல்லது. மரண ஒப்பான கண்டங்கள் வந்து நீங்க வாய்ப்புள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும்போதும் நிதானம், கவனம் தேவை.

மற்றவர்களை நம்பி முக்கியமான விஷயங்களை ஒப்படைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடன் கொடுத்து உதவுவதை தவிர்க்க வேண்டும். இரண்டு கிரகங்கள் (ராகு, குருபகவான்) அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் அமரக்கூடிய இடம்தான் சரியில்லையே தவிர பார்க்ககூடிய 3 இடங்கள் அற்புதமாக இருக்கிறது. அதாவது குருபகவான் 5வது பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும். திருமண பாக்கியம் ஏற்படும்.

அதேபோல், குருபகவான் 7வது பார்வையாக தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தமானமான 2வது வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு, பிரச்சனை அனைத்தும் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் எதிரிகள் குறைவார்கள். சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத கன்னி ராசியினருக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

மேலும், குருபகவான் 9வது பார்வையாக தாயார் ஸ்தானம், சுகஸ்தானத்தை பார்ப்பதால், தாயாரிடம் இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி பாசம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலக்கட்டம். தம்பதிகளுக்குள் இருந்த வெறுப்பு விலகி, அன்பு, நெருக்கம் ஏற்படும். ஆகமொத்தம் ஒருபக்கம் அசுபலன்களை கொடுத்தாலும், மறுபக்கம் நல்ல பலன்களை கொடுப்பார்.

கன்னி ராசிக்காரர்களே..அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் குரு எந்த விசயத்திலும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டு பயணங்களைத் தரப்போகிறார் குருபகவான். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார். பணம் விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

பரிகாரம்
அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று வாருங்கள். பரிக்கல், சிங்கர் குடி, பூவரசன் குப்பம் ஆகிய நரசிம்ம தலங்களுக்கு ஒருமுறை சென்று வணங்கி விட்டு வாருங்கள். ஆளரிநாதர் அருளும் குருவின் அருளும் உங்கள் வாழ்க்கையை பசுமையாக்கும்.

 

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment