Rishaba rasi guru peyarchi palangal 2018-19

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

ரிஷப இராசி அன்பர்களே!!!

இந்த குருப்பெயர்ச்சி சோர்ந்து துவண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

80 – 90 %

பரிகாரம்

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமை அன்று திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது சனி பகவானின் கெடு பலன்களை குறைக்கும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பலம் தீபம் ஏற்றுவது சிறந்த பரிகாரமாகும்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள தேவதானம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீரங்கநாதரை ஏதேனும் ஒரு சனிக்கிழமை துளசி மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் எனும் ஊரில் அருட்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகமலவல்லி உடனுறை ஸ்ரீகதிர்நரசிங்கப்பெருமாளை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். தன்கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை அவமானப்படுத்திய குருபகவான் பல கஷ்ட, நஷ்டங்களை தந்து, மறைமுக எதிர்ப்புகளால் உங்களை திணறடித்து, கடன் பிரச்னைகளால் தூக்கத்தைக் குறைய வைத்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

சிலர் வங்கிக் கடனுதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோயில் பஜனைகளில் கலந்து கொள்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் பாக்யாதிபதியும்ஜீவனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் தனபூர்வபுண்ணியாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.

 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனக்குழப்பம், பூர்வீக சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கல்யாண விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொள்வார். புது வாகனம் வாங்குவீர்கள்.

 

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு உற்சாகம் தரும் பங்குதாரர் அமைவார். சிலர் புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. கமிஷன், ஏற்றுமதி – இறக்குமதி, கட்டடத் தொழில், அரிசி வியாபாரம் ஆகிய வகைகளில் லாபம் அதிகரிக்கும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கு காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப நடந்துகொண்டு பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு:

விருப்பங்கள் நிறைவேறும். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நண்பர்களுடன் பழகுவதில் கவனமாக இருப்பீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு:

எதிர்பார்த்து கிடைக்காமல் போன வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். புதுப் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும். பிரபலமான கலைஞர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

#குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/gurupeyarchi19-20

மேஷம்http://bit.ly/mesham

ரிஷபம்http://bit.ly/rishabam

மிதுனம்http://bit.ly/mithunam

கடகம்http://bit.ly/kadagam

சிம்மம்http://bit.ly/simmam

கன்னிhttp://bit.ly/kannirasi

துலாம்http://bit.ly/thulam

விருச்சிகம்http://bit.ly/viruchigam

தனுசுhttp://bit.ly/thanusu

மகரம்http://bit.ly/magaram

கும்பம்http://bit.ly/kumbam

மீனம்http://bit.ly/meenamrasi

 

2018-19

மேஷம் – https://bit.ly/2RnZj3m

ரிஷபம் – https://bit.ly/2ycoVYe

மிதுனம் – https://bit.ly/2xWDPT1

கடகம் – https://bit.ly/2P41TKd

சிம்மம் – https://bit.ly/2O7a7oz

கன்னி – https://bit.ly/2QxXaRJ

துலாம் – https://bit.ly/2Nke1Fp

விருச்சிகம் – https://bit.ly/2zPM8l1

தனுசு – https://bit.ly/2zQ3gHf

மகரம் – https://bit.ly/2zQ54Ad

கும்பம் – https://bit.ly/2y0mngu

மீனம்- https://bit.ly/2NkdFyz

 

Leave a Comment